கொலைகார சர்வாதிகாரி புடினுக்கு எதிராக, உக்ரைன் ஜனாதிபதியின் பின்னால் உலக நாடுகள் அணிதிரள வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வலியுறுத்தினார்.
அத்துடன், உக்ரைன் தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
உக்ரைனுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகிவரும் நிலையிலேயே, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உக்ரைனுக்கான ஆதரவு தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, உக்ரைனுக்கான ஆதரவை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸியும் உறுதிப்படுத்தியுள்ளார்.