விக்டோரியாவில் ஷாப்பிங் சென்டரொன்றில் பாதுகாப்பு ஊழியர்மீது இளைஞர்கள் குழுவொன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த ஷாப்பிங் சென்டர் தற்காலிகமாக மூடப்பட்டது.
இத்தாக்குதல் சம்பவத்துடன் 9 இளைஞர்கள், தொடர்புபட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
14 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷாப்பிங் சென்டரின் பாதுகாப்பு ஊழியர்மீது இவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைதியை ஏற்படுத்த முற்பட்டவர்களையும் தாக்கியுள்ளனர்.
குழப்பத்தில் ஈடுபட்ட ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு குறித்த ஷாப்பிங் சென்டருக்கு நேற்றிரவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.