சிட்னி தென்மேற்கிலுள்ள பள்ளிவாசலுக்கு சமூகவலைத்தளம் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்திலுள்ள பள்ளிவாசலில் நடந்ததுபோல நடக்கும் என இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவையடுத்து மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கினர். சமூகவலைத்தளம் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த சிறுவனையும் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள சிறார் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.