ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 12 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தலை நடத்தும் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் திட்டத்தை, ஆல்பிரட் சூறாவளி குழப்பியுள்ளதால், பாதீட்டை தயாரிப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் நாளை நடைபெறும் தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாக உள்ள நிலையில், நாளை மறுதினம் கூட்டாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை பிரதமர் வெளியிட இருந்தார்.
ஆல்பிரட் சூறாவளி நாளை கரையை கடக்கும் என்றபோதிலும் தென்குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூசவூத் வேல்ஸ் மாநிலங்களில் அடை மழை மற்றும் வெள்ள பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு திட்டத்தை பிரதமர் கைவிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி பாதீட்டை முன்வைக்க வேண்டி இருப்பதால் அதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. மே மாதமே கூட்டாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது.