காப்பீட்டு நிறுவனங்கள் ஆஸ்திரேலியர்களை ஏமாற்றுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காப்பீட்டு நிறுவனங்கள் ' ஏராளமான நிதியை வைத்திருக்கின்றன, அவை மக்களை ஏமாற்றுகின்றன" எனவும், சமீபத்திய ஆண்டுகளில் பிரீமியங்களை இரட்டிப்பாக்கியுள்ளன எனவும் நிதி நிருபர் டேவிட் கோச்சின் கருத்துடன் உடன்படுகின்றீர்களா என பிரதமரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரதமர், உடன்படுகின்றார் என கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவூத் வேல்ஸில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் குறித்து தொழிற்கட்சி தலைமையிலான விசாரணையில், "அதிகமான" காப்பீட்டு வழக்குகள் காப்பீட்டாளர்களால் மோசமாகக் கையாளப்பட்டன எ ன தெரியவந்துள்ளது.
அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பலர் இன்னும் தங்கள காப்பீட்டு உதவியைப் பெற முடியாமல் இருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இயற்கை பேரழிவுகளுக்கு உள்ளாகும் வீடுகளை காப்பீடு செய்ய காப்பீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான எந்தவொரு கொள்கையையும் தொழிற்கட்சியும், கூட்டணியும் இன்னும் வெளிப்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சபா.தயாபரன்