மெல்பேர்ண் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின், காற்சட்டைக்குள் இருந்து மலைப்பாம்பு குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி இரவு 9.30 மணியளவிலேயே 34 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி வீடொன்றுக்குள் சொத்துகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் சென்றிருந்தனர்.
இதன்போது தான் அணிந்திருக்கும் காற்சட்டைக்குள் மலைப்பாம்பு குட்டியொன்று இருப்பதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து மலைப்பாம்பு மீட்கப்பட்டு, உரிய தரப்புகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.