பேர்த் விமான நிலையத்தில் இந்திய பிரஜையொருவரால் தாக்குதலுக்கு இலக்கான பெண் பணியாளர் ஒருவருக்கு 7 ஆயிரத்து 500 டொலர்கள் இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
43 வயதான குறித்த இந்திய பிரஜை கடந்த 6 ஆம் திகதி பேர்த் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இதன்போதே பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. குறித்த இழப்பீட்டு தொகையை செலுத்தும்வரை அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதியே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பணியாளரை அறைந்த அவர், கைது செய்யப்பட்டார். பெப்ரவரி 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை மார்ச் 6 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.