தாயிடமிருந்து wombat குட்டியை பிரித்து, சமூக வலைத்தளங்களில் காணொளி பதிவிட்ட அமெரிக்க பெண், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிவிட்டார் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தள பிரபலமான சாம் ஜோன்ஸ் என்ற பெண், வீதியோரத்தில் இருந்த wombat குட்டியை தூக்கி எடுப்பது போன்ற காணொளியை நேற்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
wombat யை தேடி அதன் தாய் ஓடிவரும் காட்சியும் பதிவாகி இருந்தது. அந்த காணொளி வைரலானது. வனவிலங்கு ஆதரவாளர்கள் இது தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
wombat தாயிடமிருந்து குட்டி பிரித்து எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமரும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இப்படியான விடயங்களை செய்பவர்கள், ஒரு முதலையிடமிருந்து அதன் குட்டியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.