வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
வடக்கு மாசிடோனியா என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது 1991ம் ஆண்டில் யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
வடக்கு மாசிடோனியாவின் வடமேற்கில் கொசோவோ, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் பல்கேரியா, தெற்கில் கிரேக்கம், மேற்கில் அல்பேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 51 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் பெனிவோங் அனுதாபம் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.