ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கத்தின் பாதீடு எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் ஜிம் சால்மர்ஸால், பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் அரசின் 4 ஆவது பாதீடு சமர்ப்பிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் மே 17 ஆம் திகதிக்குள் கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதீடு தொடர்பில் அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.
இரு தடவைகள் உபரியற்ற பாதீடு முன்வைக்கப்பட்ட நிலையில், இம்முறை வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, ட்ரம்பின் வர்த்தகப்போர் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு பாதீடுகளில் முன்மொழிவுகள் இருகக்கூடும்.