ஆஸ்திரேலியாவுடன் ஆர்க்டிக் ரேடார் அமைப்பை உருவாக்குவதற்கான 6 பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான ஒப்பந்தம் குறித்தான அறிவித்தலை கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்காவை இனி நம்ப முடியாது என்ற நிலைக்கு கனடா வந்துள்ளது.
இந்நிலையிலேயே கனடாவின் வடக்கு நுனாவட் பகுதியிலுள்ள ஆர்க்டிக் ரேடார் தளம்மீது கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ரேடர் ஒப்பந்தம் அமையவுள்ளது.
பாரிஸ் மற்றும் லண்டன் பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பியுள்ள நிலையிலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'கனடாவைப் பாதுகாப்பாக வைத்திருந்த சர்வதேச நிறுவனங்களும் விதிமுறைகளும் இப்போது கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் எம்முடன் இணக்கமாக இணைந்திருந்த நமது கூட்டாளியான அமெரிக்காவின் முன்னுரிமைகள் மாறத் தொடங்கியுள்ளன," என்று கனடா பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'ஓவர்-தி-ஹைரிசான்" ரேடாரில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது, இது ஒரு பரந்த பகுதியில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்-கண்காணிப்பை அனுமதிக்கும் ஒரு மேம்பட்ட அமைப்பாகும். இது எமக்கு பயனுள்ளதாக அமையும்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.