குடும்ப மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க 4.7 பில்லியன் டொலர் ஒதுக்கீடு!
குடும்ப வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற தேசிய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களுக்காக 4.7 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு தேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஜுலை முதலாம் திகதி முதல் திட்டங்களுக்குரிய நிதி பயன்படுத்தப்படும்.
பிரதமர் தலைமையில் தேசிய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதன்போதே அடுத்த ஐந்தாண்டுகளுக்குரிய திட்டத்தை முன்னெடுப்பதற்கு மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
4 துறைகளை மையப்படுத்தியதாக திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவி, குடும்ப மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக செயற்படும் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களுக்காக நிதி பயன்படுத்தப்படவுள்ளது.