கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், யூத எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்தும் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட விக்டோரிய நபர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் ஆபீசர் பகுதியிலுள்ள 41 வயதான குறித்த நபரின் வீட்டில் பெடரல் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 7 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19 ஆம் திகதிவரை குறித்த நபர், நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு பல தடவைகள் கொலை மிரட்டல் விடுத்ததுடன், யூத எதிர்ப்பு கருத்துகளையும் முன்வைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலேயே அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை நிரூபிக்கப்பட்ட பின்னர் அச்சுறுத்திய நபருக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுன் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.