பிரிஸ்பேனின் வடமேற்கில் 79 வயதான வயோதிப பெண்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலையே வீட்டு முற்றத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குயின்ஸ்லாந்து பொலிஸாரால் 40 வயது ஆணொருவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு தப்பிச்செல்ல முற்படுகையிலேயே பெடரல் பொலிஸாரின் உதவியுடன் அவரை குயின்ஸ்லாந்து பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர் இன்று பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.