யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று கைக்குழந்தையின் எலும்புக் கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு இன்று காலை ஆரம்பமானது.
கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3மனித என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம்காணப்பட்டுள்ளன.இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனிதஎன்புத் தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள்மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டிருந்தார்.