யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் நண்பகல் 12 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்குப் பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.