இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.
கட்சி தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், மாகாணசபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.