தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அக்கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது.
கட்சி தலைவரான சிறிதுங்க ஜயசூரிய சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.